Monday, September 21, 2009

பேருந்தில் பார்த்த பெண்

ஒப்பனை செய்து கொண்டும்...
பீர் குடித்து கொண்டும்...
அனைவரும் கவனிக்கும் வகையில் சத்தம் போட்டு பேசிக்கொண்டும்..

எதற்காக ஆடை அணிந்து இருகிறாள் என என்னக்கு புரியவில்லை
அவளது ஜீன்ஸ் அங்கங்கே கிழியாமலும் இருந்தது..

என் சமூகம் பெண்ணை மதிக்க சொன்னது..
நன் அவளை பெண்ணாக பார்க்க வில்லை...

பேருந்து பயணம் பாதி தூரம் எட்டிய பொது,
ஒரு குழந்தையின் முனகல் கேட்டது
குழந்தைகளுக்கான வண்டியிலிருந்து சத்தம் கேட்டது...

பதறி எழுந்த அப்பெண்..
உறக்கத்தில் இருந்த எழுந்த குழந்தையை...
மீண்டும் ஆழ்த்த உறகதிற்கு கொண்டுசெல்ல
வண்டியை ஆட்டி விட்டால்

கலாச்சாரம் மாறினாலும்,
தாய் பாசம் மாறவில்லை...

இனம் தெரியாத மரியாதை வந்தது இப்பெண் மேல்

No comments:

Post a Comment